தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் - வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழையும் சேலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கேரளா, கர்நாடகா, லட்சத் தீவு பகுதி, தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல்,  பகுதிகளில் பலத்த காற்று வீசும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ள கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in nilagiri district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->