அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
heavy rain in kearala and karanataka
மேற்கு பகுதிகளில் இருந்து வரும் காற்றின் சுழற்சி காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மற்றொரு ட்விட்டர் பதிவில், ஒடிசாவில் இன்னும் மூன்று தினங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் ஓடிசாவில் அடுத்த 72 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
English Summary
heavy rain in kearala and karanataka