மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!
heavy rain for nilgiri district
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. மேலும், 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை , கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு, வங்க கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். அதனால்அந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
heavy rain for nilgiri district