4 மாவட்டங்களுக்கு கனமழை 40 - 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை  தீவிரம் அடைந்துள்ளது, எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

வடகிழக்கு பருவமழை ஆனது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரமாக பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கனத்த மூன்று நாட்களாக கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. ரமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாதங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் கடல் பகுதியில் மணிக்கு 40 - 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain for four district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->