மீண்டும் தொடங்கிய மழை.. தமிழகத்தில் மழை கொட்டி தீர்க்கபோகும் பகுதிகள்!!
dec 11 weather report
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாத தொடங்கத்தில் பருவமழை குறைந்தது. இதனை தொடர்ந்து நவம்பர் மாத இறுதியில் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படுகிறது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . இதன் காரணமாக நாளை, நாளை மறுதினமும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு. சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.