தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. இன்று மழை புரட்டி எடுக்க போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
dec 02 weather report
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, விழுப்புரம், புதுச்சே,ரி கடலூர், ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்.