தமிழகத்தில் 13 மாவட்டங்களை குறிவைத்த கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை கனமழை பெய்துவருகிறது. அவற்றில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து பெருதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் & புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர், நாகை, நீலகிரி, கடலூர், ஈரோடு, விழுப்புரம், திருவாரூர் உட்பட 13 மாவட்டங்கள் & புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மோகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

august 22 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->