13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் போகும் மழை! சென்னை வானிலை மையம் தகவல்!!
august 18 weather report
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழையும், தென் மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் காலை வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.