தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அதிதீவிர கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!
august 09 weather report 1
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி அணை, பில்லூர் அணை நிரம்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யக்கூடும். தேனி, நீலகிரி, கோவை மாற்றங்களில் மிக கனமழை நீடிக்கும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
august 09 weather report 1