தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யப் போகும் பகுதிகள்.. வானிலை மையம் அறிவிப்பு.!!
aug 02 weather report in tamilnadu
தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, 4.8.2021 முதல் 6.8.2021 வரை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
aug 02 weather report in tamilnadu