கர்நாடகாவை புரட்டி எடுக்கப்போகும் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
4 days rain in karnataka
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.
இந்நிலையில், கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடகத்தில் ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்டு 1ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். கர்நாடகாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.