தமிழகத்தின் மிக கனமழை பெய்யப் போகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மேற்கு தொடரஞ்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மாவட்டத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 july weather report in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->