தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.!!
11 jan rain in tamilnadu
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நாளை கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இன்று தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டரில் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.