காலி சேர்களை வீடியோ எடுத்ததால் அடி, உதை.,வீடியோ உள்ளே.!! திமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் அராஜகம்!!
Journalist attacked in virudhunagar congress meeting
தற்பொழுது, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே எஸ் அழகிரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் கலைய தொடங்கினர்.
அப்போது மேடைப்பேச்சை நேரலை செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் பொதுமக்கள் காலி செய்த சேர்களை நோக்கி வீடியோ எடுக்க துவங்கினார். இதனால், காலி சேர்களை வீடியோ எடுக்க கூடாது என காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், பத்திரிக்கையாளர் தனது பணியை தொடர்ந்தார். இதனையடுத்து, பத்திரிகையாளர் காங்கிரஸ் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால், நிகழ்ச்சியில் பதற்றம் நிலவியது இச்சம்பவத்தை தொடர்ந்து, விளக்கக் கூட்டம் அமளி, துமளியானது.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
English Summary
Journalist attacked in virudhunagar congress meeting