கடலூர் மாணவி திலகவதி கொலை பிரச்சனையில்., இயக்குனரின் கண்டன பதிவு.!!
cudallore girl killed case director mohan speech about that problem
கடலூர் மாவட்டத்திலுள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய மாணவியின் பெயர் திலகவதி. இவர் அங்குள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில்., நேற்று பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் இளைஞன் ஆகாஷ்., இவரது வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததில்., அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்து பெற்றோர்கள் கதறித்துடிக்கவே., இதுகுறித்த வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த தலித் இளைஞனை காவல் துறையினர் தற்போது அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் திலகவதியை நான்தான் குத்தி கொன்றேன் என்று தெரிவித்துள்ளான்.
இந்த செய்தியை அறிந்து ஆத்திரமடைந்த இயக்குனர் மோகன் தனது கண்டனத்தை விடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அந்த காணொளி பதிவில்., இந்த நாடக்காதல் கொலைகளுக்கு திரைத்துறையும் ஒரு காரணமே என்றும்., நாடக காதலை வளர்த்துவிடும் அரசியல்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளால் இளைஞர்களின் வாழ்க்கையானது சீரழிக்கப்படுகிறது. பெண்கள் பரிதாபமாக தங்களின் உயிர்களை இழந்து வருகின்றனர். கொலையான பெண்ணின் குடும்பத்தினர் எவ்வுளவு கனவுடன் அவரை படிக்க அனுப்பியிருப்பர் என்றும்., பெண் குழந்தைகளுக்கு இன்றைய சூழ்நிலையை தெளிவாக கூறி., தற்காப்பு கலையை சொல்லிக்கொடுத்து வளருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cudallore girl killed case director mohan speech about that problem