கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நேர இருந்த விபரீதம்.! காவலர் செய்த அவசர வேலை.!
accident video in panrutti
லாரியில் சிக்கி விபத்துக்குள்ளாக இருந்த மாணவனை சரியான சமயத்தில் டிராபிக் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தி இருக்கின்றார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே, நான்கு முனை சந்திப்பில் ஒவ்வொரு நாளும், அதிகமாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவலர் ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக அந்த வழியாக வேகமாக லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது.
அப்பொழுது, போக்குவரத்து காவலரையும் மீறி சிறுவன் ஒருவன், தன்னுடைய மிதிவண்டியில் இருந்தபடியே சாலையை கடக்க முயற்சிதான்.
விபத்து நேர இருப்பதை கவனித்த போக்குவரத்து காவலர் ராஜதீபன் உடனடியாக அந்த சிறுவனை பிடித்து தடுத்து நிறுத்தினார். இதனால் நேர இருந்த விபத்து தடுக்கப்பட்டது. அந்த காவலர் சிறுவனை தடுக்கவில்லை என்றால் அவன் லாரியில் மோதி உயிரிழக்க நேர்ந்திருக்கும்.
English Summary
accident video in panrutti