இந்திய நிறுவனம் என்பதால் எங்கள் மீது Google பாரபட்சம் காட்டிகிறது Paytm நிறுவனர் பரபரப்பு குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


பண பரிமாற்ற செயலியான Paytm கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கடந்த 18 ஆம் தேதி நீக்கப்பட்டது. விதிமுறை மீறல் புகார் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் பிளே ஸ்டோர் தெரிவித்திருந்தது.

செல்போன் செயலியான Paytm நிதிச்சேவைகளையும் அளித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது அந்த செயலியை பயன்படுத்தியவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என Paytm நிறுவனம் டிவிட்டரில் விளக்கமளித்தது.

இதனைத்தொடர்ந்து, அடுத்த சில மணிநேரங்களில் கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலிக்கு அனுமதிக்கப்பட்டது. Paytm சார்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுளள்ளதாக கூகுள் விளக்கமளித்திருந்தது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் Paytm நிறுவனத்தை மட்டும் பாரபட்சமாக நடத்துவதாக Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு மட்டும் கூகுள் கொள்கைகள் மாற்றப்படுகின்றன என்வும் இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை  மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வர்த்தக போட்டி ஆணையத்தை அணுக உள்ளதாக Paytm குறிப்பிட்ட விஜய் சேகர் சர்மா, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது கூகுள் பாரபட்சம் காட்டுவாதாக என எங்கள் வாதங்களை இந்திய வர்த்தக போட்டி ஆணையத்தில் முன்வைப்போம் என விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paytm say complain to google


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->