வாட்ஸ் அப் செயலிக்கு முடிவு கட்டிய மத்திய அரசு.! புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது.!
new app to replace whatsapp in india
வாட்ஸ் ஆப் செயலியை தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்படுகிறது. வாட்ஸ் ஆப் செயலியில் பல்வேறு வதந்திகளும் உண்மைக்கு புறம்பான தகவல்களும் பரவி வருவதாக பல புகார்கள் மத்திய அரசுக்கு வந்தது. இதையயடுத்து பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பல துறைகளுக்கு இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் முக்கிய தகவல் பரிமாற்றங்களுக்கு இந்த செயலியால் நம்பகத் தன்மை கூடும்.
இந்த செயலி ஆங்கிலம் இந்தி தவிர இதர 11 இந்திய மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
new app to replace whatsapp in india