விக்ரம் லேண்டர் குறித்து புதிய தகவலை வெளியிட்ட நாசா.!
nasa new update about vikram lander
நிலவின் தென் துருவத்தை ஆராயவதற்காக சந்திரயான் 2 விண்கலம் மூலமாக விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், விக்ரம் லேண்டர் ஆர்பிட் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனிடையே, விக்ரம் லேண்டரை இருப்பிடத்தை கண்டறிய இஸ்ரோ அமெரிக்கா விண்வெளி ஆராட்சி நிறுவனமான நாசாவிடம் உதவி கோரியது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை நாசாவின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், புகைப்படங்களை தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாகவும், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியில் நிழல்கள் தென்படமுடியாதவை இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
English Summary
nasa new update about vikram lander