#BREAKING : விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்.!!
ISRO launches PSLV C51
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமேசோனியா 1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இன்று 59 ஆவது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து 10:24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு துவங்கியது. முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை தீவிரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ முதன்முதலாக வணிக ரீதியில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியுள்ளனர்.
பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள செயற்கை கோள்களில் முதன்மை செயற்கை கோளான அமேசோனியா. பிரேசில் நாட்டுக்கு சொந்தமானது. 637 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள். பூமியை ஆய்வு செய்வது, அமேசான் காடுகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணியாகும்.