லேண்டர் இலக்கிலிருந்து 500 தூரத்தில் தரையிறங்கியது.! மத்திய அரசு தகவல்.!
central government about vikram lander
சந்திராயன் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் இருந்து 500 மீட்டருக்கு கடினமாக தரை இறங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் சந்திராயன்2 தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், முதற்கட்டமாக நிலவின் மேல் பரப்பில் இருந்து 30 கிலோ மீட்டர் உயரம் வரை விநாடிக்கு ஆயிரத்து 683 மீட்டர் வேகத்தில் விக்ரம் லேண்டர் தரை இறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வேகமானது 7.4 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றது. லேண்டர் உயரத்திற்கு சென்றதும், விநாடிக்கு 146 மீட்டர் என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்டதைவிட லேண்டரின் வேகம் குறைந்ததே, கடின தரை இறக்கத்துக்கு காரணம் என ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
central government about vikram lander