நவீன வகைப்பாட்டியலின் தந்தை.. இன்று இவரின் நினைவு தினம்..!
carl linnaeus memorial 2020
கரோலஸ் லின்னேயஸ்:
நவீன வகைப்பாட்டியலின் தந்தை கரோலஸ் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.
இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கரோலஸ் லின்னேயஸ் 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மறைந்தார்.
English Summary
carl linnaeus memorial 2020