#Breaking: ஈ.வெ இராமசாமி குறித்த வீடியோ.. ழகரம் வாய்ஸ் சேனல் யூடியூபர் கைது..!!
Zhagaram Voice YouTube Channel Dakshina Moorthy Arrested by Police
ஈ.வெ இராமசாமி குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் சேனல் தட்க்ஷிணா மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ழகரம் வாய்ஸ் என்ற யூடியூப் சேனலானது, தமிழ் தேசியத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சேனலாக செயல்பட்டு வருகிறது. இந்த சேனலை தட்க்ஷிணா மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இந்த சேனலில் தமிழ் தேசியத்திற்கு எதிராக இருக்கும் செயல்கள் குறித்தும், திராவிட கட்டமைப்புகள் குறித்தும் பேசி பல்வேறு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த அக்.11 ஆம் தேதி ஈ.வெ ராமசாமி குறித்து ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளியில் உள்ள தகவல், ஈ.வெ இராமசாமியை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அதற்கு தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து இராயப்பேட்டை காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்தும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ழகரம் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்ற தட்க்ஷிணா மூர்த்தியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Zhagaram Voice YouTube Channel Dakshina Moorthy Arrested by Police