மதுரை: செல்போன் டவரில் தில்லானா.. மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி மதுபோதை ஆசாமி போராட்டம்..! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கீரைத்துறை மூலக்கரை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு பாகியலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

கண்ணனுக்கு மது பழக்கம் இருந்து வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த பாகியலெட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவரை சமாதானப்படுத்த பலமுறை கண்ணன் முயற்சி செய்தும் பாக்கியலெட்சுமி அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.  இதனால், மனமுடைந்த அவர் மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறினார்.

உச்சியில் நின்றபடி அவர் தனது மனைவியுடன் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

ஆனால், மனைவியுடன் சேர்த்து வைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மதுபோதையில் டவரின் உச்சியில் நடனமாடினார். மேலும், பல சாகசங்களை செய்தார்.

அவரை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் அவரின் மனைவியை அழைத்து வந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். சுமார், 4 மணி  நேரத்திற்கு பின் மதுபோதை தெளிந்ததும் டவரில் இருந்து இறங்கிய அவரை காவல்நிலையதிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth struggle in the cell phone tower


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->