மீன்பிடி குளத்திற்கு காவல் இருந்த இளைஞர் சுட்டு கொலை... காவல்துறை தீவிர விசாரணை..!
Youth shot dead while guarding fishing pond
அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மரியநாதபுரம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மீன் பிடி குளம் ஒன்றை குத்தைககைக்கு எடுத்துள்ளார்.
இதனால், அவரது மகன் ராஜேஷ் நேரத்தில் காவலுக்கு இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவதன்று, வழக்கம் போல இரவு நேர காவலுக்கு இருந்துள்ளார் அப்போது அடையாளம் தெரியாத சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கி சத்ததை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கதினர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு மருத்துவமைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth shot dead while guarding fishing pond