பல பெண்களுடன் கள்ள தொடர்பு... உறவினர்களின் துணிகர செயல்..! - Seithipunal
Seithipunal


உறவுகார பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கு திருமணமாகி  மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்  குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 1ம் தேதி வயல்வெளியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். விசாரணைய தீவிர படுத்திய காவல்துறையினர் கிளியூரை  சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கொளுவூரை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.  

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசுக்கு முத்துப்பாண்டியின் உறவினர் பெண்ணுடன் தவறான உறவு இருந்து வந்துள்ளது. இதனை முத்துபாண்டி கண்டித்துள்ளார். இதே போல ஜீவானந்தத்தின் நெருங்கிய உறவுகார பெண்ணுடனும் தவறான தொடர்பு வைத்திருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் திட்டமிட்டு திருநாவுகரசை கொலை செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Murder Near Ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->