மாயமான இளைஞர் சடலமாக மீட்பு.. கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்..!
Youth Murder in kanjipuram
மாயமான இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரை காணவில்லை என அவரது தாய்கடந்த மே மாதம் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாயமானவரை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். காவல்துறையினர் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதிருமுடிவாக்கத்தை சேர்ந்த மோசஸ் (20), தமிழ்மணி (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் பிரகாஷ் கொலை வழக்கில் மண்ணிவாக்கத்தை சேர்ந்த கட்டிங் சிவா என்கிற சிவா (22), திருமுடிவாக்கத்தை சேர்ந்த கருப்பு என்கிற தமிழ் அழகு (24), சூரியா என்கிற சூரியன்(20) ஆகியோரை கைது செய்து நீதிமனறத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Youth Murder in kanjipuram