தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்.! ரயில் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பரத் (22). இவர் இன்று அதிகாலை வண்டிமேடு பகுதி அருகே இயற்கை உபாதை கழித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்று ரயில் எதிர்ப்பாராத விதமாக பரத் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் உயிரிழந்த பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed train collision in Villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->