மனைவியுடன் பேசிய இளைஞரை அடித்து கொன்ற கணவன்..!
Youth killed near Thenkasi
வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மனைவி அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனிடம் தனது மனைவியிடம் பேச கூடாது என கண்டித்துள்ளார்.
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் பாலகிருஷ்ணன் கணேசனின் மனைவியுடன் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பகுதியில் பாலகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் பாலகிருஷ்ணன் சரமாரியாக தாக்கினார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த பாலகிருஷ்ணனை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed near Thenkasi