முன்விரோத்தால் இளைஞர் படுகொலை.. கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த விபரீதம்..!
Youth Killed Near Krishnagiri
முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமேனா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா . இவர் கைகால்களில் பலத்த காயமுடன் சடலமாக குமாரனப்பள்ளி ஏரிக்கரையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக தெரிந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மஞ்சுநாத் அவரது நண்பர்களான ஜாக்கி என்கிற ஜெயகுமார் (25), லச்சு என்கிற லட்சுமி நாராயணன் (24) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புகொண்டார். இதனை அடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Killed Near Krishnagiri