#தஞ்சாவூர்.! ரயில் மோதியதில் இளைஞர் பலி.!
Youth killed in train collision in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் நேற்று காலை முத்துக்குமார் என்பவர் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கும்பகோணம் நோக்கி சென்ற ரயில் எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக வீடியோ காட்சியில் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed in train collision in Thanjavur