ஓசூர் அருகே பரிதாபம்.! ரயில் மோதி இளைஞர் பலி.!
Youth killed in train collision in hosur near
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற போது இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பா. இவருடைய மகன் மோகன்(24) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மோகன் தேன்கனிக்கோட்டை சாலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ரயில் திடீரென மோகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகனை ரயில்வே போலீசார் மோகனை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed in train collision in hosur near