மதுபோதையில் இளைஞரை கொலை செய்த வாலிபர்கள்.. இரண்டு மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை..!
Youth Killed His Friend Near Ranipet
மதுபோதையில் இளைஞரை வெட்டி கொன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (38) என்பது தெரியவந்தது.
இந்நிலையில், அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஷாலேஷா (23), கமலேஷ் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராற்றால் அவரை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்ததது குறிப்பிட தக்கது.
English Summary
Youth Killed His Friend Near Ranipet