தென்காசி: கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்த இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், செல்லத்தாயார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாமஸ். இவருக்கு திருமணமாகி அருள்ராஜ் என்ற மகன் இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருப்பதால் அவர் வீட்டை அலங்கரித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று அவர் வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்து கொண்டிருந்தார். இதனை அடுத்து, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed by electric shock Near Thenkasi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->