கள்ளகாதலியுடன் யார் பழகுவது என்ற போட்டி., வாலிபர் வெட்டி கொலை..!! கன்னியாகுமரியில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியுடன் யார் பழகுவது என்  ஏற்பட்ட தகராற்றில் இளைஞர் கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோப்பூர்  பகுதியை சேர்ந்தவர் அஜய் ஜான்சன். இவர் அந்த பகுதியில் மினி டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு  அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடனும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் அஜய்க்கும் பிரபாகரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று  தோப்பூர் பகுதிக்கு வந்த நண்பர்களுடன அஜய் வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன் அவரது நண்பர்களுடன் வழிமறித்து வாக்குவாத்ததில் ஈடுபட்டுள்ளார். 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே  பிரபாகரன் அரிவாளால் அஜயையும்  அவரது நண்பரையும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அஜயை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயம்பட்டவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth hacked to death in illegal love dispute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->