இளைஞர் செய்த வியப்பான சம்பவம்...10 ருபாய் காசுகளை வைத்து பைக்கா..!
youth gave 10 rupees coin buy the bike
ஓசூர் அருகே கெலமங்கல கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் வயது 30. இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோம் -ல், நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக, புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பிய நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் பேருந்துகளில் வாங்க மறுக்கின்றனர்.
10 ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறிக்கோளுடன் 10 ரூபாய் நாணயத்தை வழங்கித்தான் பைக்கை பெற வேண்டும் என்று உறுதி கொண்டார். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக தனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு இன்று அவற்றை 8 பைகளில் கட்டிக்கொண்டு, ஓசூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்தனர். மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஷோரூம் ஊழியர்கள் பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரைக்கம்பளத்தில் கொட்டி, எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்குப் பிறகு, அதில் தவணைத்தொகை ரூ.1,80,000/- இருந்ததையும்,, மீதித்தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதியளித்ததையும் ஏற்றுக் கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் "அப்பாச்சி ஆர்.ஆர்.310" என்ற புதிய ரக நவீன மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். இந்த வியப்பான சம்பவத்தால் ஷோரூம் பகுதியில் மகிழ்ச்சியும் , பரபரப்பும் ஏற்பட்டது.
English Summary
youth gave 10 rupees coin buy the bike