உயிரை பறித்த செல்பி மோகம்.. ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் பலி..!
Youth Death taken selfie
தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்றார்.
எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.