திருப்பத்தூர் || பாம்பு பிடிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
Youth Death in Thirupaththur
வீட்டில் உள்ள புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கன்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. இன்று காலை அந்த பகுதியில் உள்ள வீட்டில் அதிக வீரியம் கொண்ட கண்ணாடி வீரியன் பாம்பு ஒன்ரு புகுந்துள்ளது.அதனை அவர் பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Death in Thirupaththur