திருநங்கையுடன் நான்காண்டு காதல்.. சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கவிதா என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒன்றாக வசித்த தொடங்கியுள்ளனர்.

கடந்த நான்கு வருடமாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவிதா தினேஷின் பெற்றோருக்கு அழைத்து அவர்களது மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த தினேஷின் பெற்றோர் மகனுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கவிதாவை பிரிய மனமின்றி பாதி வழியிலேயே திரும்பி வந்து உள்ளார். மதுபோதையில் கவிதாவின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதாவை காணாததால் விரக்தியடைந்த அவர் கவிதாவின் சிலையை எடுத்துக்கொண்டு ஏரிக்கரை பக்கம் சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104 
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்க்க்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Committed Suicide Near Kanjipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->