கடன் தொல்லையால் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு.. திருச்சியில் நடந்த சோகம்..!
Youth Committed Suicide in Trichy
கடன் தொல்லையால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சிவில் என்ஜினீயரான இவர் வீடுகளை கட்டி விற்று வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாரிடம் பணம் வாங்கி 9 வீடுகள் கட்டி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் பாதியிலேயே நின்றுள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கட்டிடப் பணிகளை தொடங்கியுள்ளார். கட்டிட பொருட்களின் அவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதற்கிடையில், கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டு தொல்லை செய்துள்ளனர்.
மன உளைச்சலில் இருந்த அவர் புதிதாக கட்டிடம் கட்டி வரும் கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Committed Suicide in Trichy