காதலியுடன் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


காதலியுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காமக்காபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. . இவரது மகன் நந்தழகன் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech IT-ல் 3படித்து வருகிறார்.  இவர் தன்னுடன் படித்த மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காரணமாக நந்தழகன் மன உளைசலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவதன்று, அவர் விஷமருந்தி தற்கொலைக்கு  முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், நந்தழகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நந்தழகனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் மகன் சாவிற்கு காரணமான கல்லூரி மாணவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.amil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Committed suicide in selam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->