வெளிநாடு செல்ல விசா கிடைக்காததால் இளைஞர் தற்கொலை.. கோவை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


வெளிநாடு செல்ல விசா கிடைக்கததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் கிஷோர்குமார் இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.  கிஷோர் குமார் திருமணத்திற்கு முன்பு ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா காரணமாக இந்தியா திரும்பிய நிலையில் அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

மீண்டும் ஜப்பான் செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடு செல்ல விசா கிடைக்கததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Committed Suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->