கிருஷ்ணகிரி: குடும்ப பிரச்சனையால் மன அழுத்தம்.. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு..!
Youth commits suicide Near Krishnagiri
குடும்ப தகராற்றால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால், மன வருத்ததில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Youth commits suicide Near Krishnagiri