காஞ்சிபுரம் | இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.! போலீசார் விசாரணை.!
Youth commits suicide in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் அன்பு செல்வன் (19). இவர் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அன்பு செல்வனை மீட்டு சிகிச்சைக்காக காட்டாங்குளத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அன்புச்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், அன்புச் செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அன்பு செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth commits suicide in kanchipuram