பெற்றோர் பைக் வாங்கி தராததால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை., சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!
Youth commits suicide for not buying a bike
பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை என்பதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சவுந்திரபாண்டி . இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கிறார். மகேந்திரன் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை முதலாமாண்டு படித்து வருகிறார்.
மகேந்திரன் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கிதர சொல்லி கேட்டுள்ளார். அவர்கள் பியகு வாங்கிதருவதாக கூறியுள்ளனர். அதையும் மீறி அவர் தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனவேதனையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth commits suicide for not buying a bike