திருவண்ணாமலை: குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தற்கொலை..!
Youth commit suicide Near Thiruvannamalai
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருக்கு திருமணமாகி ரம்யா (27) என்ற மகளும் இரு மகன்களும் உள்ளனர். வெங்கடாசலமும் அவரது மனைவியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வர் என கூறப்படுகிறது. இதனால், அவரது பிள்ளைகள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
சம்பவதன்று சகோதரன் இருவரும் வீட்டில் தூங்கிகொண்டிருந்த போது ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூங்கி எழுந்த போது சகோதரி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம்பக்கதினர் அவரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்தது அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக ரம்யாவின் அண்ணன் ரகு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth commit suicide Near Thiruvannamalai