தஞ்சாவூர்: மதுவுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!
Youth commit suicide Near Thanjavur
வீட்டின் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வைத்தியநாதன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன் . இவருக்கு திருமணமாகி தினேஷ்வரன் (19) என்ற மகன் இருக்கிறான். தினேஷ்வரன் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தினேஷ்வரனுக்கு மது பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி விட்டு குடும்பத்தில் உள்ளவர்களுடன் தகராற்றில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே சம்பவதன்று அவர் தூக்கிட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth commit suicide Near Thanjavur