நண்பன் இறந்த துக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Youth commit suicide In Thiruvallur
நண்பன் இறந்த துக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கோட்டை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மில்டன் (17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். 11ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அவரது நண்பர் உதயகுமார் கடந்த நவம்பர் மாதம் இறந்து விட்டார்.
அதிலிருந்து மில்டன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நண்பன் இறந்த துக்கத்தில் அவர் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இந்த நிலையில், தான் மில்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Youth commit suicide In Thiruvallur