வாட்ஸ்அப்பில் ப்ளாக் செய்த காதலி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!
Youth commit suicide due to his lover block him
காதலி ப்ளாக் செய்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் தண்டபாணி (49). இவருக்கு அஜய் (19) என்ற மகன் இருகிறான். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் வேறொருவரை காதலிப்பதாக நண்பர் கூறவே அதனை அவர் அந்த இளம்பெண்ணிடன் சண்டையிட்டுள்ளார். இதனை அடுத்து, ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றவே அந்த பெண் இவரை பிளாக் செய்துள்ளார்.
இதனால், அவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால், தகவல் எதுவும் தெரியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் நீண்ட நேரமாகியும் அவர் அறை கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவரது தந்தை கதவை தட்டினார்.
அங்கு வந்த அவரது நண்பர் அறையின் பின்புறம் சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Youth commit suicide due to his lover block him