திருவள்ளூர் அருகே இளைஞர் எரித்து கொலை., கள்ளகாதல் பிரச்சனையா? என விசாரிக்கும் காவல்துறை..!
Youth burnt to death in Thiruvalluvar district
இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், நாலூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபிநாதன் (33). இவர் மீது அடையாளம் தெரியாத 6 நபர்கள் தீவைத்துள்ளனர். அந்த தீயை போராடி அணைத்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவலளித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் கூறிய இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும் அவரால் பாதிக்கப்பட்ட யாராவது கொலை கும்பலை ஏவி அவரை கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth burnt to death in Thiruvalluvar district